Saturday, November 22, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1321 முதல் 1325 வரை



குறள்-1321

காதலனிடம் எந்தத் தவருமே இல்லை.ஆனாலும்..அவன் ஒவ்வொரு முறையும் காதலியிடம் ஊடல் கொள்கையில் அவன் அன்பு மேலும், மேலும் கூடுகிறதாம்.ஆகவே இந்தக் காதலி ஊடலுக்கு ஜே சொல்கிறாள்.

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அள஧க்கு மாறு.

அவரிடம் தவறு ஒன்றும் இல்லை.ஆயினும். அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

குறள்-1322

காதலன் காதலியில் ஊடல் கொள்கையில், காதலிக்கு சிறு துன்பம் ஏற்படுகிறது.ஊடலுக்குப் பின் கூடல் அன்பை மேலும் பெருக்குவதால்..முதலில் அவளுக்கு ஏற்படும் துன்பமும் பெருமை வாய்ந்ததாம்.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். #1322

ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.

பாடல்-1323

தேவர்கள் உலகம் என்று ஒன்று இருக்கிறதாம்.அங்கு உள்ளவர்களுக்கு இன்பத்திற்கு பஞ்சமே இல்லையாம்.இப்படியெல்லாம் சொல்லப்படும் அவ்வுலகம்..தன் காதலனுடன் அவளுக்கு உள்ள நிலத்துடன் சேர்ந்த நீர் போல ஒற்றுமையால் ஊடலுக்குபின் கிடைக்கும் இன்பத்தைவிட அதிகமாய் இருக்காதாம்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதா?.

குறள்-1324
காதலனை இறுகத் தழுவிக் கொண்டு..இணைபிரியாமல் இருக்க வேண்டுமாயின் ஊடலும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.அது இருவருக்கிடையே மன உறுதியையும் உடைக்கும் ஆயுதமாம்


புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல ஆயுதமும் உள்ளது.

பாடல்-1325

காதலன் தவறே செய்ய வில்லை ஆயினும் தவறிழைத்தவன் போல காதலியிடம் ஊடல் கொண்டு..காதலியினால் புறக்கணிக்கப் படுகையில்..அந்த ஊடலை எண்ணினால் சற்று இன்பமாயும் உள்ளதாம்.


தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. #1325

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஒர் இன்பம் உள்ளது.

No comments: