Thursday, November 6, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1221 - 1225



குறள்-1221

காதல் வயப்பட்டவர்களுக்கு மாலைப்பொழுது துன்பம் தரக்கூடிய ஒன்று.கூடுதலும், பிரிதலும் பெரும்பாலும் மாலைப் பொழுதிலேயே நடப்பதால்/திருமணத்திற்கு முன் வரும் மாலை இனிக்கும்..அதற்குப் பின்..


மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. #1221


பொழுதே! நீ வாழி. நிமாலைக்காலம் அல்லை; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.

குறள்-1222

மாலைப் பொழுது மறந்து இரவு தொடங்குகிறது.அவள் காதலன் வரவில்லை.அவளுடன் சேர்ந்து மாலையு, இரவும் கூட துன்பம் அடைகிறதாம்


புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.

குறள்-1223

மாலைப்பொழுது வந்தால் காதலிக்கு..காதலனைக் காணாவிடின் துன்பம் உண்டாகும்.இங்கு அவன் அருகில் இருக்கும்வரை பசலை எட்டிப்பார்க்காத நிலையில், அவன் பிரிந்ததும் மாலைநேரம் வரும் முன்னரே உடலில் பசலை வந்துவிடுகிறது

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

குறல்-1224

காதலனைப் பிரிந்து இருக்கையில் வரும் மாலைப்பொழுது அவளைக் கொல்ல வீசப்பட்ட வாளைப்போல துன்பத்தைக் கொடுக்கிறதாம்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

காதலர் பிரிந்திருக்கும் போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

குறள்-1225

காலைப்பொழுது காதலிக்கு இன்பத்தைத் தருகிறது.அதே போல இல்லாது மாலைநேரம் ஏன் இல்லை.அதற்கு அவள் ஏதும் தீங்கிழைக்கவில்லை.ஆயினும் அவளுக்கு அது கெடுதியே செய்கிறதே!

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.


நான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.

No comments: