Friday, November 7, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1226 - 1230



குரள்-1226

காதலிக்கும் போது..மனம் மாலைப்பொழுது வராதா? என ஏங்குகிறது.மணந்தபின், காதலன் அவளைவிட்டு சில காலம் பிரிந்து சென்றாலும்..முன்பு இன்பம் தந்த மாலைப்பொழுது இப்போது துன்பத்தைத் தருகிறதாம்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தரக்கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் நான்ன் அறியவில்லை.

குறள்-1227

காமம் இருக்கிறதே..அது ஒரு அழகிய பூவைப் போன்றதாம்.அப்பூ காலைப் பொழுதில் அரும்புகிறதாம்.பகலில் சற்றே முதிர்கிறதாம். மாலையில் முழுதும் மலர்ந்துவிடுகிறதாம்.மாலையில் மலர்வது மகிழ்வுதானே!

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.


இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

குறள்-1228

ஆயனின் புல்லாங்குழல் ஓசை, காதலனைப் பிரிந்துள்ள காதலிக்குத் துன்பம் தரும் மாலைப்பொழுதிற்கு வரும் தூதாகத் தெரிகிறதாம்.


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

காதலர் பிரிவால்  தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை அவளைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் காதில் ஒலிக்கிறது.

பாடல்-1229

மாலைப் பொழுது ..காதலிக்குத் துன்பத்தைத் டஹ்ருகிறது.காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாய்த் தெரியும் என்பார்கள்.இந்தக் காதலிக்கோ..அந்த மாலை அவளை மட்டுமன்றி அனைவரையுமே துக்கத்தில் ஆழ்த்துவது போலத் தெரிகிறதாம்


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.


அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்து போலத் தெரிகிறது.

குறள்-1230

பொருளீட்ட காதலன் பிரிந்து சென்றுள்ளான்.ஆனால் அது அவளுக்கு வருத்தத்தைத் தரவில்லை.ஆனால்..மாலைப்பொழுது வந்ததும் அவளைத் துன்பம் வாட்டுகிறதாம் அவன் நினைப்பு.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

பொருள் ஈட்ட சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

No comments: