Wednesday, October 1, 2014

திருக்குறள் - காமத்துப்பால் -1100



ஒரு பெண்ணின் இதயத்தில் நாம் இருக்கிறோமா? அதை எப்படி அறிவது? இதயத்தின் வாசல் விழி என்பர்.அவள் விழிகளைப் பாருங்கள்..அந்த வாசல் உங்களை வரவேற்றால்..அவள் உங்களை விரும்புகிறாள் எனப் பொருள்.பல்லாயிரம் சொற்கள் சொல்லியும் விளங்கவைக்க முடியாததை..பார்வை ஒன்றே அழகாக விளக்கிடும். வள்ளுவன் சொல்கிறான் ..படியுங்கள்


கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிய பின்னால் பின் வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

No comments: