Wednesday, October 8, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1118,1119,1120



குறள்-1118

அவன் நிலவைக் காதலிக்கிறானாம்.ஆனால்..அது அவன் காதலிக்கு நிகராக ஒளி வீச வேண்டுமாம்.அதாவது அவனைப் பொறுத்த வரை நிலவை விட காதலியின் முகம் ஒளி வீசுகிறதாம்.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

நிலவே! இப் பெண்ணின் முகத்தைப் போல உன்னால் ஒளி வீச முடியுமேயாயின், நீயும் என் காதலைப் பெறுவாய்.

குறள்- 1119

தன் காதலி மலர் போன்ற கண்களை உடையவளாம்.நிலவிற்கு அவளது முகம் போல அழகுடன் ஆக வேண்டுமானால், நிலவு என்ன செய்ய வேண்டுமாம்..அவனுக்கு மட்டுமே தெரிய வேண்டுமாம்.பிறர் கண்கள் அதைப் பார்க்கக்கூடாதாம்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

நிலவே! மலர் போன்ற கண்களை உடைய இவள் முகம் போல நீயும் இருக்க விரும்பினால்,பலரும் காணுமாறு நீ தோன்றாதே!

குறள்-1120

அவள் காதலியின் பாதங்கள் பஞ்சினைப் போல மென்மையானவையாம்.மலர் மீது அவள் கால் வைத்தாலும் அது முள்ளாய் குத்துமாம் அவளுக்கு..


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

(மென்மையான) அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் காதலியின் மெல்லிய பாதங்களுக்கு நெருஞ்சி முள் போல் தைக்குமாம்.


No comments: