Monday, October 20, 2014

திருக்குறள்- காமத்துப் பால் -1173 ,1174,1175



குறள்-1173

அன்று ஒருநாள் காதலனை ஆசையோடு வேக வேகமாகப் பார்க்கிறாள் காதலி.இன்று, ஏதோ அலுவல் காரணமாக அவன் அவளைப் பிரிந்து சென்று உள்ளான். அந்தப் பிரிவைத் தாங்காத கண்கள் கண்ணீர் சிந்துகின்றன.இதை நினைத்தால் மனம் சிரித்துக் கொள்கிரது.ஆனாலும்..கண்ணீர் அவனைக் காணும் வரை அவளுக்கு நிற்காது போல இருக்கிறதே!

 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

அன்று காதலனைக் கண்கள் அவைகளாகவே விரந்து பார்த்து விட்டு, இன்று அவன் பிரிவினால் தாமே அழுகின்றன.இது சற்று நகைக்கும் தன்மை உடையது (அல்லவா)

குறள்-1174

அழுது அழுது என்ன பயன்..அவன் வரவில்லை/இந்தக் கண்கள் இருக்கிறதே அதுதான் காமநோயை எனக்குள் உண்டாக்கியது.பின்..அழமுடியாது அதன் கண்ணீர் வற்றியும் விட்டன.எனக் காதலி புலம்பிகிறாள்

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோ்யை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் கண்ணீர் இன்றி வறண்டு விட்டன.

குறள்-1175

அவளின், காமநோய்க்கு முக்கியக் காரணம் கண்கள்தான்.ஆனால்..அதேகண்கள், அவளுக்கு கடலைவிடப் பெரிய துன்பத்தையும் தந்துவிட்டு. அவளுடன் சேர்ந்து தூங்காமல் துன்பத்தையும் அனுபவிக்கிறது.


படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். #1175

கடலளவு பெரிதான தாங்கமுடியா காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று தூங்காமல் துன்பத்தால் வருந்துகின்றன.
.

No comments: