Thursday, October 9, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1131 முதல் 1135வரை



(மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்லுதல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை.ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.



அவனுக்கு காதலில் தோல்வி அதனால் மடல் ஏறுதலைத் தவிர அவனுக்கு வேறு துணை இல்லையாம்

குறள் 1131

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலணுக்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு வலிமையானத் துணை இல்லை

பாடல்-1132

அவனுக்குக் காதலில் தோல்வி.இனி காதல் நிறைவேற வேறு வழியும் இல்லை.இந்நிலையில் அவன் மடல் ஏற நினைக்கிறான்


நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

காதல் த்ள்வியால் என் உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறது.வெட்கத்தைவிட்டு நடள் ஏற துணிந்து விட்டேன்

குறள்- 1133

காதல் தோல்வி ஏற்பட்டால்..காதலன் அக்கதல் நிறைவேற தன் தன்மானத்தையும் விட்டு,நாணத்தையும் விட்டு காதலியை அடைய முடியுமானால் போதும் என முயற்சிப்பான். மடல் ஏறவும் தயாராம் இக்காதலன்

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

முன்பு நல்ல ஆண்மையும், நாண உணர்வும் பெற்றிருந்த நான் இன்று காதலுக்காக அவற்றை ,அறந்து மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்

குறள்- 1134

காதல் வந்து விட்டால் நாணம் மறைந்து விடும்.காதல் நிறைவேறவில்லை எனின் எப்பாடுபட்டாவது அது நிறைவேற வெட்கம் ,ஆண்மை ,வலிமை எல்லாம் மறந்து ஈடுபடுவான் காதலன்


காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

நாணம்,நல்ல ஆண்மை ஆகிய தோணிகளைக் காமம் எனும் கடும் நோய் அடித்துக் கொண்டு போய் விடுகிறது.

குறள்-1135

சிலர் காதல் தோல்வியடைந்தாலும், அது வெற்றி பெற காதலியே சில உபாயங்களைச் சொல்வதுண்டு,இக்குறள் கூட அப்படியோ எனத் தோன்றுகிறது.காதலன் மடல் ஏறுவேன் என மிரட்டுகிறானோ!

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மேகலையையும்,மெல்லிய வளையலையும் அணிந்த இப்பெண் மாலை மரும் நோயான காதலையும், மடலூர்தலையும் எனக்கு தந்து விட்டாள்

No comments: