Sunday, October 5, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1111,1112



மோப்பக் குழையும் அனிச்சம் என்றார் வள்ளுவர்.அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடி விடும்.அந்த அளவு மென்மையானதாம்.ஆனால் அதனை விட மென்மையானதும் ஒன்று இருக்கிறதாம்.. அது என்ன...

குறள்- 1111

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். #1111


அனிச்ச மலரே ,. நீ நல்ல ,மென்மைத் தன்மையைப் பெற்றுள்ளாய்.ஆதலான் என் பாராட்டுகள்.ஆனால் நான் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மையைக் கொண்டவள்.

குறள்-1112

மலரைக் கண்டால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது நமக்கு.அதற்கு ஏதேனும் காரணம் உண்டா? பூத்துக் குலுங்கும் அதன் அழகே அழகு என்கிறோம்..ஏன்...அதற்கும் வள்ளுவனிடம் ஓர் காரணம் இருக்கிறது.அது என்ன தெரியுமா?


மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

மனமே...மலரைக் கண்டு மயங்குகிறாயே (அது ஏன்) என் மனைவியின் கண்கள் பலரும் கண்டு வியக்கும் மலர்போல திகழ்வதால்தானே!

No comments: