Thursday, October 23, 2014

திருக்குறள்- காமத்துப்பால்-1181 முதல் 1183



குறள் 1181

காதலன் வேலை சம்பந்தமாய் வெளியூர் செல்ல நேரிடுகிறது.வேறு வழியில்லாமல் காதலையை விட்டுச் செல்கின்றான்.அவளும் சம்மதிக்கிறாள்.ஆனாலும், அவன் பிரிந்து சென்றதும்..அந்தப் பிரிவினால் பசலை நோய் அவளை தவிக்க வைக்கிறதாம்.

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

விரும்பிய காதலரை அன்று பிரிந்திருக்க சம்மதித்தேன்.ஆயின், பிரிந்த பின் பசலை உற்ற என் நிலையை யாரிடம் சொல்வேன்

குறள்-1182
காதலன் வேலை நிமித்தம் அவளைப் பிரிகிறான்.ஆனாலும், பிரிந்திருக்கும் அவனை எண்ணி காதலி உடலில் பசலை நிறம் உடலில் ஏறுகிறது.அது, அவனால்தான் என்பதால் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

 காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.


குறள்-1183

அவனைப் பிரிந்ததால் அவளுக்கு அழகு எதற்கு எனத் தோன்றுகிறது.அவன் இருந்தால் அழகு தேவை..அவன் இல்லாததால் அந்த அழகையும் அவன் கொண்டு சென்று விட்டான்.அத்துடன் இல்லாது, அவனைப் பிரிந்து வாடுவதால் பசலையும் ஏற்பட்டுவிட்டது..அது கண்டு வெட்கம் தோன்றவில்லை.அவன் இருந்தால்தானே அவள் வெட்கப்பட முடியும்?

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.


காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

No comments: