Tuesday, October 7, 2014

திருக்குறள் - காமத்துப்பால்-1115,1116,1117



பெண்களின் இடையை கொடி இடை என கவிஞர்கள் வர்ணிப்பது உண்டு.மெல்லிய இடைதான் பெண்டிக்கு அழகு.ஒரு கவிஞர் தனது ஒரு பாடலில் கதாநாயகியிடம் கதாநாயகன் பாடும்போது, "இடையா..இது இடையா..அது இல்லாதது போல இருக்கிறது" என பாடுவது போல எழுதியிருப்பார்.கவிஞர்கள் பலருக்கு முன்னோடியான வள்லுவன் என்ன சொல்கிறான்..

குறள்-1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அவள் தனது மென்மை தெரியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் சூடினால்..அவளது இடை ஒடிந்து வீழ்ந்தாள்.இனி நல்ல பறைகள் அவளுக்கு ஒலியாது

குறள்-1116

சாதாரணமாக மங்கையரின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுவது உண்டு."அவளைப் பார்த்து பின் நிலவைப் பார்த்தால் நிலவில் ஒளி மங்கியது போல இருக்கிறதாம் காதலர்க்கு.காதலியின் முகம் அவ்வளவு ஒளி பொருந்தியதாம்.ஆனால் இங்கு என்ன நடக்கிறது பாருங்கள்...

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

வானில் நட்சத்திரங்கள் மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாமல் மயங்கித் தவிக்கின்றன.

குறள்-1117

நட்சத்திரங்கள் இவள் முகத்தைப் பார்த்து ஏன் கலங்க வேண்டும்.நிலவின் களங்கம் போல இவள் முகத்தில் களங்கம் உள்ளதா..இல்லையே

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

படிப்படியாய் குறைந்து படிப்படியாய் நிறைந்து காணும் நிலவில் உள்ளது போல இந்தப் பெண்ணின் முகத்தில் களங்கம் இல்லையே

No comments: