Friday, October 24, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1184,1185,1186,1187



குறள்1184

காதலனைப் பிரிந்து இருக்கிறாள் காதலி.ஆனாலும் அவன் நினைவை மறக்க வில்ளை..அவனிடம் உள்ள நல் குணங்களைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறாள். ஆனாலும்...அவன் உடன் இல்லையே என உள்ளம் வருந்துகிறது.அதனால் அவளை பசலை வாட்டுகிறது.


உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

நான் அவனுடைய நல் குணங்களை நினைக்கின்றேன்; நான் பேசுவதும் அவற்றைப் பற்றியே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது ஏன்?

குறள் 1185

திருமணம் நடந்த புதிதில் காதலன் வெளியே சென்ற சில நாட்களில் பசலை கொண்டுவிடும்.ஆனாலும்..இப்பொழுது மணம் முடிந்து ஆண்டுகள் ஓடி விட்டன.ஆனாலும்..முன்னைக் காட்டிலும்..அவர் மீது அன்பு அதிகமாகிவிட்டதா? பிரிந்ததுமே பசலை வாட்டுகிறதே!


உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

குறள்-1186

விளக்கு எரிகின்றது.அதிலுள்ள எண்ணெய் குறையக் குறைய வெளிச்சம் மங்கி இருள் சூழத்தொடங்குகிறது.வேளிச்சம் குறைந்ததுமே இருள் பூமியைத் தழுவிக்கொள்வது போல காதலனின் தழுவலில் அவனது பிடி சற்ருத் தளர்ந்தாலும்..காதலியின் உடலில் பசலை படர்கிறதாம்
 
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்க
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கு சுடர் மெலிவதைப் பார்த்து உடன் நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்து பசலை வரும்.


குறள்-1187

அவள் அவனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.உடலில் ஏதும் நேரவில்லை..இன்பத்தைத் தவிர.ஆனால்..அவன் அவளை விட்டு சற்று விலகியதுமே பசலை அவளை அள்ளிக் கொண்டது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

தலைவனை தழுவிக் கொண்டேன்.பின் .சிறிது அகன்றேன்..உடன் பசலை நிறம் அள்ளிக் கொள்வது போல உடலில் படரிவிட்டதே!




No comments: