Tuesday, October 28, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1197,1198,1199,1200


குறள்- 1197
ஆணிடம் மட்டுமே காமன் இயங்குகிறானாம்.அதனால்தான் பெண்கள் காம நோயால் வருந்துகையில்..ஏற்படுகிறதாம் பசலை.அதனால்...காமனின் கண்பார்வை பெண்ணிடமும் பட்டால்..பெண்ணின் துன்பம் பறந்தோடிடும்.


பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். #1197

காமன், ஒரு பக்கமாக மட்டும் இயங்குவதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.


குறள்- 1198

மனைவியர் வேண்டுவது என்ன? அன்பான கணவன்.தன்னிடம் இன்சொல் சொல்லும் தலைவன்.ஆனால்..பலர் இன்று அதற்கு மாறுபட்டு..மனைவியிடம் அன்பு செலுத்தாமல்..அவள் படும் வேதனைகளை உணராமல்..அவ்வளவு ஏன்..ஒரு அன்பான சொல்கூட சொல்லாது செயல் படுகின்றனர்.பாவம் அத்தகைய பெண்கள்

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். #1198


தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் கொடுமை வேறொன்றும் இல்லை.

குறள் -1199

அன்பில்லாத கணவ்ன் அமைந்தாலும்..பெண்களுக்கே உரிய தன்மை அவன் எது பேசினாலும் மகிழ்வதே! அவனை பிறர் புகழ்ந்தால் மகிழ்ச்சி..அப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால் தான் இன்று இல்லறங்களே நல்லறங்களாய் உள்ளன

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.


என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் கேட்பது என் செவிக்கு இன்பத்தைத் தருகிறது

குறள்-1200

அன்பில்லாத கணவ்ன்.மனைவி எவ்வளவோ முயன்றும் மாற்ற இயலவில்லை.ஆனாலும்..மனம் என்ன செய்கிறது..கணவனிடம் சென்று துன்பத்தைச் சொல்கிறது.ஆனால் அவன் செவி சாய்க்கவில்லை.அவனை மாற்ற முயல்வது என்பது..கடலைத் தூர்க்கும் முயற்சி என நினைக்க ஆரம்பித்து விட்டாள் மனைவி

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

நெஞ்சே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது உனக்கு எளிதான வேலையாகும்.

No comments: