Thursday, October 30, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1206 முதல் 1210 வரை



குறள்-1206

காதலன் காதலியைப் பிரிந்து சென்று விட்டான்.அவளால் அந்த வேதனையை தாங்க முடியவில்லை.ஆனாலும் அவனுடன் இருந்த நாட்களை எண்ணி அது தரும் மகிழ்ச்சியில் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாளாம்.

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.


காதலராகிய அவரோடு நான் வாழ்ந்திருந்த  நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனை நினைத்து உயிர் வாழமுடியும்

குறள்- 1207

காதலன் மறந்து சென்று விட்டான்.ஆனாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாளாம்.அது எப்படி அவளுக்கு சாத்தியமாகிறது என்றால், அவனுடன் வாழ்ந்த நினைவுகள் மறக்க நினைத்தாலும் மறக்கமுடியாமல் சுடுகிறது.ஆனாலும், அந்த சூட்டையும் மறக்க விரும்பவில்லை அவள்.அது அவளுக்கு இன்பத்தையும் தருவதால்.


மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.

குறள்- 1208

காதலனி நினைத்து..நினைத்து மகிழ்கிறாள்..அதற்கு காதலனின் அனுமதி தேவையில்லையே.அதனால் காதலன் கோபம் அடைய முடியாதே..அதுவே எனக்கு உதவியாய் உள்ளது என மகிழ்கிறாள்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

அவரை நான் அதிகமாக  எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அல்லவா?.

குறள்-1209

காதலிக்கையில் காதலன் சொல்கிறான்..நான் ஓருயிர் ஈருடல் என.ஆனால், அவளைப் பிரிந்து சென்றபினவரை எண்ணி எண்ணியே காதலியின் உயிர் போய்க்கொண்டிருக்கிறதாம்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய அன்பில்லா  தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

குறள்-1210

இதுவரை பிரியாமல் இருந்த காதலன் பிரிந்து சென்றுள்ள்ளான்.இந்நிலையில் காதலிக்குத் துணையாய் இருப்பது நிலவு மட்டுமே.அந்த நிலைவை..தான் காதலனைத் தேட மறைந்து விடாமல் உடன் இருக்க வேண்டுகிறாள்.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

நிலவே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.

No comments: