Saturday, October 25, 2014

திருக்குறள்- காமத்துப்பால்-1188 முதல் 1190



குறள்-1188

காதலர் இடையே..தவறு ஆண்கள் மீது இருந்தாலும், சமுதாயம் பெண்ணையே குறை கூறும்.அதேபோல காதலன் பிரிந்து சென்றபின்..அவன் நினைவால் காதலிக்கு பசலைப் படர்ந்தது.அது கண்டு காதலனைக் குறை சொல்பவர் யாரும் ஏன் இல்லை? என வள்ளுவன் காலத்திலேயே கேட்கிறாள் இப்பெண்.

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

இவள் உடலில் பசலைப் படர்ந்தது என சொல்கிறார்களே தவிர..(அதற்குக் காரணமான)காதலன் பிரிந்த்துதான் காரணம் என சொல்பவர் யாரும் இல்லையே!

குறள்-1189

பொருளீட்ட காதலன் ,காதலியை பிரிந்து செல்கிறான்..அதற்கு அவளும் சம்மதிக்கிறாள்.அவன் நல்லவன்..ஆகவே அவனைப் பிரிவதால் பசலை அடந்தேனாயின் அடைந்துவிட்டுப் போகட்டும்.


பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலன் நல்லவர் எனில் எனது மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்.

பாடல்-1190

அவன் , அவளைப் பிரிந்து சென்றுள்ளான்.பிரிந்தவன் சொன்ன காலத்திற்குள் வரவில்லை.அதனால் காதலி பசலை ஆயினள்.அதற்காக அவனை ஏசாமல்..தன்னைக் குறை சொல்வாராயின் அதுவும் நல்லதே என்கிறாள் காதலி இங்கு.

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், நான் பசலை உற்றதாக பெயர் எடுத்தால் நல்லதே.

No comments: