Monday, October 27, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1194,1195.1196



கணவனை மிகவும் விரும்புகிறாள் மனைவி.ஆனால், கணவனுக்கோ மனைவியைக் கண்டாலே பிடிக்கவில்லை.ஆனால்..அவளை உலகுக்கேப் பிடிக்கும்..இருந்தாலும் தன் கணவன் தன்னை விரும்பவில்லையே என்ற வருத்தம் பெண்ணை விட்டு அகலாது

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

குறள்-1195

காதல்..என்பது இரு தரப்பினரும் மனது ஒருமித்தால் ஆகும்.ஆனாலும்..நம்மைக் காதலிப்பவர் நம்மைக் காதலிக்கவில்லை யெனில்...நமக்கு வேறு எவ்வகையில் மகிழ்ச்சியைத் தரும்.காதல் தோல்வி..என்பது மிகவும் வருத்தத்தைத் தரக்கூடியதுதான்.

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

அவள் காதல் கொண்ட காதலர், அவர் அவ்வாறே அவளிடம் காதல் கொள்ளாதபோது, அவளுக்கு அவர் என்ன நன்மை செய்வார்?.

குறள்-1196

ஒருதலைக் காதல்...ஆம்..காஅதலி அவனை விரும்புகிறாள்.ஆனால்...காதலனுக்கு அவளிடம் நாட்டமில்லை.காதல் என்றாள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பம் தரக்கூடியது. காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் சமமாய் இருந்தால் இன்பமானதாகும்.

No comments: