Tuesday, October 14, 2014

திருக்குறள் - காமத்துப்பால் -1151 முதல் 1155 வரை



குறள் 1151

உயிருக்கு உயிரான காதலர்கள்.ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தால் அவர்கள் உயிரே போய்விடும் நிலை. அப்படிப்பட்ட சமயத்தில் காதலன் வெளியூர் செல்ல வேண்டியுள்ளது.அவன் காதலியிடம் விடை கேட்கிறான்.அப்போது அவள் சொல்கிறாள்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
நல்வரவு வாழ்வார்க் குரை. #1151

என்னைப் பிரியவில்லை என்றால் அதை என்னிடம் சொல்.அப்படி நீ என்னை பிரிந்து போய்தான் ஆக வேண்டுமாயின்..(உன்னைப் பிரிந்ததும் என் உயிர் போய் விடும்)நீ வரும் போது உயிருடன் இருப்பவர் எவரோ அவர்களிடம் சொல்லிச் செல்.

குறள்-1152

அவன் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் மனம் மகிழ்கிறது.ஆனால் அவர் என்னைப் பிரிந்து வெளியே செல்லப்போகிறார் என்பதை எண்ணினாலே துன்பம் ஏற்படுகிறது.அவனைப் பிரியா வாழ்க்கை அவளுக்கு வேண்டுமாம்


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

உரை-
அவர் பார்வையே எனக்கு மகிழ்ச்சி தருகிறது.ஆனால்..அவர் செயலோ அவர் என்னைப் பிரியப் போகிறார் எனும் அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

குறள்-1153
"உன்னைப் பிரியேன்' எனக் காதலன் சொன்னாலும்..ஏதேனும் ஒரு காலத்தில் பிரிந்துதானே செல்ல வேண்டும்.அதனால் அவன் சொன்னதை நம்பக்கூடாது..என காதலி தன் மனதை தேற்றிக் கொள்கிறாள்

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

அறிவுடைய காதலர்களும் ஒருகாலத்தில் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்..பிரிந்திடேன் என காதலன் சொல்லும் உறுதிமொழியை நம்புவது இயலாது.

குறள்-1154

உன்னைப் பிரியமாட்டேன் என அவளை மணந்ததும் கணவன் கூறுகிறான்.அது நடைமுறையில் சாத்தியமா என பேண் நினைக்காமல்..அவன் அவளைப் பிரியும் நேரம் வந்த போது..அவன் சொன்னதை நம்பியது தவறா? என நினைக்கிறாள்>(ஆனாலும் அவன் பிரிவு தவிர்க்கமுடியாது என அவளுக்குத் தெரியும்)

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டாம் என்று முன் சொன்னவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.(இல்லை)

குறள்-1155

தலைவன் தலைவியைப் பிரிய வேண்டிய வேளை.ஆனால் அவன் பிரிந்தால் திரும்ப அவருடன் நான் சேர்வது அரிதாகிவிடும் என பயப்படுகிறாள் தலைவி.தலைவன் தன் கட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அவள் விரும்புகிறாள்.


ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

காதலன் தன்னைப் பிரிந்து சென்றால், மீண்டும் கூடுவது அவ்வளவு எளிதல்ல..ஆகையால்..அவர் பிரிந்து செல்லாமல்முதலிலேயே காத்துக் கொள்ள வேண்டும்.

No comments: