Sunday, October 19, 2014

திருக்குறள்- காமத்துப் பால் -1171 ,1172



குறள்-1171

காதலனைப் பிரிந்ததால் வருத்தப்படுவது நெஞ்சமாய் இருந்தாலும், அவனைக் காண வேண்டும் என அழுவது கண்கள்தானே?

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

காமநோய் கண்கள் கண்டதால் விளைந்தது.அவ்வாறிருக்க காட்டிய கண்கள் இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?


குறள்-1172

காதலிக்கும் முன் காதலன் எப்படிப்பட்டவன் என்பதை எல்லாம் உணராமல் காதல் கொண்டன கண்கள்.ஆனால் அந்த அன்பை உணராமல் இன்று துன்பத்தால் வாடுவதும் அந்த் அக்கண்கள் தான்.

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

ஆராய்ந்து உணராது காதல் கொண்ட கண்கள் இன்று அவனைப் பிரிந்ததால் துன்பம் அடைந்தது தன்னால்தான் என அறியாது தவிக்கிறதே! ஏன்?

No comments: