Saturday, October 11, 2014

திருக்குறள் -1141 -காமத்துப் பால் 1141,1142,1143,1144,1145




குறள்-1141

காதலிப்பது யாருக்கும் தெரியாது என்றால்....காதல் நிறைவேறாவிடின்..வருத்தமுறும் காதலன் நிலை ஏன் இப்படி ஆயிற்று என யாருக்கும் தெரியாது.ஆனால்..அதுவே ஊருக்கே தெரிந்துவிட்டால்..வேறு வழியின்றி காதல் நிறைவேறியே ஆகும்.இதைத்தான் வள்ளுவன் மறைமுகமாக இக் குறளில் உணர்த்துகிறானோ?

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்கியம்.

குறள்-1142

அவர்கள் காதலிக்கிறார்கள்.ஆனால் அடிக்கடி சந்தித்து பேச முடியவில்லை.இதை உணர்ந்து தானோ என்னவோ.ஊராய் இவன் காதலைப் பற்றி பேச ஆரம்பிக்கின்றனர்.அந்தப் பேச்சினால்...வேறு வழியில்லாமல் காதலியின் பெற்றோர் காதலனுக்கே மணமுடிக்கின்றன.இதி..ஊரார் பேச்சு நன்மையை பயக்கியது

 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலை பழித்துரைத்தது எங்களுக்கு நன்மையகவே முடிந்துவிட்டது.

குறள் 1143

ஊரார் இவன் காதலிப்பதைப் பற்றி பேச ஆரம்பித்ததால்..அது இவன் காதலியை மணம் புரிவது இவனுக்கு எளிதாகிவிட்டதாம்.

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, மணம் செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

குறள் 1144

ஊர்வம்பு பேசுவது கூடாது என்பர்.ஆனால் அப்படி வம்பு பேசுவது கூட இக் காதலர்களுக்கு நன்மையாய் முடிந்து விட்டதாம்.

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.


எம் காதல் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.


குறள்-1145

கள் உண்டால் மனம் மகிழ்வது போல..இவன்(ள்) காதலிக்கிறான்(ள்) என ஊர் பேசும்போது..மனம் மயங்குகிறது காதலர்களுக்கு

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.


கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது மகிழ்ச்சியாவது போல எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

No comments: