Monday, October 13, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1146 முதல் 1150 வரை



சந்திரகிரஹணம் என்ரால்..பாமரர்கள் முன்பெல்லாம்..சந்திரனை பாம்பு பிடித்தது.ஆகவேதான் சந்திரன் மறைந்து காணப்படுகிறான் என்பார்கள்.இது அவர்களிடையே பரவிவிட்ட ஒரு செய்தியாக இருந்து வந்தது.அதுபோல பரவக்கூடியது வேறொன்று உண்டாம்..அது என்ன..?

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.


காதலனைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய ஊர்ப்பேச்சோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

பாடல்-1147

காதல் நிறைவேற வேண்டுமானால்..அதில் ஒரு திரில் இருக்க வேண்டும்.தாய், தந்தை, ஊர் இதெல்லாம் காதலுக்குத் தடை போட்டால்தான்..காதலர்களிடையே நாம் இணயவேண்டும் என்ற எண்ணம் மிகவும் வலுக்கும்.அதைத்தான் இக்குறளில் சொல்கிறான் பொய்யாமொழியான்.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

இந்தக் காம நோய் ஊராரின் தூற்றலே எருவாகவும் தாய் கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

பாடல்-1148

முன் சொன்னது போலவேதான் இது..ஊரார் இவர்கள் காதலைப் பழித்தால்..அக்காதல் அழியாது.மேன் மேலும் வளரும்.எப்படி வளருமாம்...

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

ஊரார் பழிப்பதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அணைப்போம் என்று எண்ணுவதைப் போன்றது

பாடல்-1149

காதலன் அவளை மணப்பேன் என்று கூறி சென்று விட்டான்.அச் சமயம் ஊரார் இவள் காதலை பழிக்கமுடியாது.அதனால் அவள் ஏன் நாண வேண்டும்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.


அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அந்தப் பலருக்காக நாணியிருக்க முடியுமோ.

பாடல்-1150

ஊரார் இவர்கள் காதலை இவர்கள் விரும்புமாறு பேசுகின்றனர்.காதலன் இதை விரும்பினால்...அவர்களின் பேச்சை ஒப்புக் கொள்வார்.

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

நாம் விரும்புகின்றவகையில் இவ்வூரார் பேசுகின்றனர்.அதனால் இனி காதலன் விரும்பினால், விரும்பியப்படி என்னை மணப்பார்

No comments: