Wednesday, October 8, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1121,1122,1123,1124,1125



குறள்=1121

சர்க்கரைப் பந்தலில் தேன் மாரிப் பொழிந்தாற் போல, அவரது பேச்சு இருந்த்து..என ஒருவர் இனிமையுடன் பேசுவதைக் குறிக்கச் சொல்வார்கள்.ஆனால்..அதே தேனில்..பாலையும் சேர்த்தால் அது எப்படியிருக்கும்..பார்ப்போமா...

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசும் இவளது  தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

குறள்-1122
உயிருடன் ஒரு உறவு கலந்தது என்பார்கள்.அதாவது..இவரின் உயிர் போனால் வேறு ஒருவருடன் அவருக்கான ஆன உறவும் போய் விடுமாம்.அப்படிப்பட்ட உறவு என்னாவாயிருக்கும்...


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. #1122

இப்பெண்ணோடு எனது உறவு உடம்புக்கும்.உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தன்மையானதோ..அத்தன்மையானது.

குறள்-1123

கண்ணில் பாவை உள்ளது.அப்பாவையில் தெரிகிறது ஒருவன் காதலிக்கும் பாவையின் உருவம்.ஆனாலும்..அவனால் அப்பாவையை முழுதும் ரசிக்க முடியவில்லையாம்.காரணம் கண்ணிலுள்ள பாவையாம்.வள்ளுவனே..என்னே உன் ஒப்பீடு..


கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய் விடு.நான் விரும்பும் பாவைக்கு உன்னால் என் கண்ணில் இருக்கும் இடம் போதவில்லை.

குறள்-1124
ஓருயிர் ஈருடல் என்பார்கள்.சாதாரணமாக கணவன், மனைவிக்குள் அப்படியிருந்தால்..அந்த வாழ்க்கை, வாழ்வின் ருசி இவை அலாதி.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

ஆய்ந்து தேர்ந்த அணிகலன்களை அணிந்த இவளைக் கூடும் போது உயிர்க்கு வாழ்வாகிறாள்.பிரிகையில் என் உயிர் நீங்குவது போலவும் உள்ளது.

குறள்-1125.

காதலி தன் காதலனைப் பிரிந்து சில காலம் இருந்தாள்.பின்னர் ஒருநாள் அவனைப் பார்த்த போது,"இவ்வளவு நாள் என்னைப் பிருந்திருந்தாயே..எப்போதேனும் எனை நினைத்தாயா? என அவனுடன் ஊடல் கொண்டாள்.பார்த்தான் காதலன் ,இவளை மகிழ்விக்க ஒரே வழி..."நான் உன்னை மறந்தாள் அல்லவா? நினைப்பதற்கு' என்றாம்.ஊடல் போய் கூடல் ஆயிற்று.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

ஒளியுடனான கண்களைக் கொண்ட காதலியின் பண்புகளை நான் மறந்தால்தானே பின்னர் நினைக்க முடியும்.ஆனால் ஒரு போதும் நான் மறந்ததில்லையே!

No comments: