Sunday, October 26, 2014

திருக்குறள் - காமத்துப்பால்- 1191,1192,1193



தான் விரும்புகின்ற காதலன் தன்னை மட்டுமே விரும்ப வேண்டும்.சதா தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்..என்றெல்லாம் பெண்கள் ஆசைப்படுவது உண்டு.அப்படிப்பட்ட காதலன் அமையப் பெற்றால் காதலிகள் விதை இல்லா பழத்தைப் பெற்றார் போன்றவர்களாம்.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.


தன்னை விரும்பும் காதலர், தன்னை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

குறள்-1192

விவசாயிகள் பயிரிட்டுவிட்டு பயிர் செழிக்க மழையை எதிபார்ப்பர்.அந்த மழையும், உரிய நேரத்தில் பெய்து விட்டால். அந்த விவசாயியின் மனம் மகிழ்வெய்தும்.அது போன்ற மகிழ்ச்சியைத் தரக்கூடியது வேறு ஒன்றும் உண்டாம்.அது என்ன ..


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

கணவனைப் பிரிந்து வாழ முடியா மனைவிக்கு, அவளின்றி வாழ முடியாமல்..கணவர் காட்டும் அன்பு,, தன்னை எதிர்ப்பார்த்து உயிர் வாழும் மக்களுக்கு வானம் உரிய நேரத்தில் மழை தந்தது போலவாம்.

குறள்- 1193

காதலிக்கு..பொன்னகைத் தேவையில்லை.எப்போது தெரியுமா? அந்தப் பெண் முழுக்க முழுக்க காதலனால் அன்பைப் பெற முடியுமானால். அப்படிப்பட்ட பெண்..தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என்ற கர்வத்தில் இருப்பாளாம்.காதலனின் அன்பின் சக்தியின்றி வேறு இதற்குக் காரணம் என்ன?!


வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு

 காதலனால் விரும்பப்படும் பெண்ணுக்கே..(பிரிந்து சென்றுள்ள வர் வருவார் என்ற பெருமிதத்தால்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்ற செருக்குத் தகும்

No comments: