Wednesday, October 1, 2014

திருக்குறள் -1101,1102,1103- காமத்துப்பால்



குறள் 1101

 பார்க்க விழிகளும், செவி இன்பம் பெற செவிகளும், உணவின் சுவை அறிய நாக்கும், முகர வும், மூச்சு விடவும் மூக்கும், தீண்ட உடலும்..ஆக ஐம்புலன்கள் இன்பமும் உண்டு. ஆனால் இந்த ஐம்புலன்களும் இன்பத்தையும் ஒன்றே தருமாம்.வள்ளுவன் விளையாடுகின்றானா...அப்படி ஐம்புலன் இன்பம் தரும் ஒன்று எது  ..பார்க்கலாமா..

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களால் ஆகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த (பெண்ணிடத்தில்)இவளிடத்தில் உள்ளன.

குறல் - 1102

மனிதனுக்கு நோய் வருகிறது.மருத்துவரிடம் போகிறொம்.நோய் தீர அதற்கான மருந்தைத் தருகிறார் மருத்துவர்.ஆனால் அவளால் (எனக்கு) உண்டான காதல் நோய்க்கு மருந்து அவள்தான் என்கிறான் வள்ளுவன்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.


நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வந்த காதல் நோய்க்குகு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

குறள் -1103

தெய்வங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்ட உலகங்களில் திருமாலின் உலகமும் ஒன்று.அப்படிப்பட்ட அந்த சொர்க்கலோகம் எங்கே உள்ளது..நம்மால் அங்கு போக முடியுமா? இதற்கா..கவலைப் படுகிறீர்கள்..அந்த உலகில் உங்களுக்குக் கிடைக்கும் இன்பம்..இந்த பூ உலகிலேயே கிடைக்கிறதே..அது என்ன..நமக்குத் தெர்யாததை வள்ளுவன் சொல்கிறான் ...

குறள்-1103

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

திருமாலின் உலகம், நாம் விரும்பும் மனைவியின் தோள்களில் சாய்ந்து துயிலும் துயில் போல இனிமையானது

No comments: