Wednesday, October 29, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1201 முதல் 1205 வரை



குறள்-1201

கள் என்பதை குடித்தால் மயக்கம் வரும்.ஆனால்...எந்த லாகிரி வஸ்துக்களையும் பயன்படுத்தாவில்லாலும், மனிதனுக்கு ம்னைவியுடன் கூடி அனுபவித்த இன்பததை, அவள் பிரிந்திருந்த வேளையிலும் எண்ணினாலே இன்ப மயக்கம் தருமாம்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.


நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் தருதலால்,
 கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

குறள்-1202

காதலி, காதலனைப் பிரிந்திருக்கிறாள்..அது அவளுக்குத் துன்பம் தந்தாலும்...காதலன் தன்னிடம் கொண்டுள்ள காதலை எண்ணினால்..அத் துன்பமும், இன்பமாய் தெரிகிறது

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் எவ்வகையிலும் சரி, காதல் இனியதுதான்.

குறள்-1203

தும்மல் வரும்போது..வீட்டில் உள்ள பெரியோர்கள்..சாதாரணமாக..:யாரோ நினைக்கிறார்கள்" என்பார்கள் என்பதை அவள் நம்புகிறாள்.அதனால் தான் அவளுக்குத் தும்மல் வந்து அடங்கியதும்..அவளது காதலன் அவளை நினைப்பதை விட்டு விட்டானோ என ஐயம் கொள்கிறாள்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்


தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பது போலிருந்து நினையாமல் இருந்து விடுவாரோ!.

குறள்-1204

சந்தேகம் என்பது ஒரு வியாதி.அதை குணமாக்க எந்த மருந்தும் இல்லை;அதுவும்..கணவன், மனைவியிடையே அந்த வியாதி புகுந்துவிட்டால்..வாழ்நாள் முழுதும் வேதனைதான்.ஆனால், வள்ளுவன் சொல்வது அப்படியில்லை.காதலிக்கு , காதலன் மீது அவ்வளவு அன்பு.ஆனால்..அதே போன்று அவருக்கும் என் மீது அன்பு இருக்குமா? என நினைக்கிறாள்.இது, அவன் மீது உள்ள சந்தேகத்தால் அல்ல.அவன், தன்னிடம் மட்டற்ற அன்பு செலுத்த வேண்டும் என விருப்பத்தினால்.


யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.

குறள்-1205

சென்ற குறளின் நாயகி, தற்போது ஒரு படி மேலே செல்கிறாள். அவர் அவளைதன் நெஞ்சத்திலிருந்து விலக்கிவிட்டாராம்.ஆனால்..இவளால் முடியவில்லையாம்.அப்படிப்பட்ட நிலையில், தன் மனதில் அவன் குடியிருக்க
வெட்கப்பட வில்லையே ! என நினைக்கிறாளாம்.

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

தனது நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.

No comments: