Thursday, October 16, 2014

திருக்குறள்- காமத்துப்பால் -1161- 1162



குறள்-1161

காதலி, அவளது காதல் துன்பத்தை யாரும் அறியக்கூடாது என மறைக்கிறாள்.ஆனாலு, ஊற்ரு நீர் எப்படி இறைக்க இறைக்க பெருகுமோ அதுபோல அவள் மறைக்க மறைக்க அவளுக்குத் துன்பமே அதிகரிக்கிறதாம்.

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

இக் காமநோயைப் பிறர் அறியாமல் நான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் பெருகுவது போல பெருகுகின்ரது..

குறள்-1162

காமத்தால் ஏற்படுகின்ற துன்பத்தை காதலியால் மறைக்கமுடியவில்லையாம்.அதே நேரம் இந்நோய்க்குக் காரணமான காதலனிடம் இதைச் சொல்லவும் வெட்கமாய் இருக்கிறதாம்(பெண்கள் இவ்விஷயத்தைப் பற்றி பேச நாணுவர்)
 
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய்க்குக் காரணமான காதலர்க்குச் சொல்லவும் நாணமாய் உள்ளது.

No comments: