Monday, October 6, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1113.1114




குறள்-1113
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா..அல்லது செயற்கை மணமா என்ற சந்தேகமும், அதனால் சிவனே வந்து தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுத்ததும்..நக்கீரன்..அப்பாடலில் பொருட்குற்றம் இருக்கிறது என்றதும்...நான் எழுதிய பாட்டில் குற்றமா? என சிவன் நேரில் வந்து கேட்டதும்.."முக்கண்ணைக் காட்டினும்...குற்றம் குற்றமே" என்று உரைத்ததும் எல்லாம் நாம் அறிவோம்.ஆனால், உண்மையிலே..பெண்களுக்கு கூந்தல் அல்ல..உடலே நறுமணமாம்..வள்ளுவன் உரைக்கின்றான்.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில் போன்ற தோளை உடைய அவளின்  மேனி மாந்தளிர், பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!.

குறள்-1114

பெண்ணின் முகத்தைத் தாமரை மலருக்கும், கண்களை கயலுக்கும் சாதாரணமாக அனைத்து காதலர்களும் வர்ணிப்பது உண்டு.ஆனால்..வள்ளுவன் ஒரு படி மேலே போய்..பெண்ணின் கண்களிப்போல தான் இல்லையே என மலர் வெட்கப்படுமாம்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குவளைப் பூக்களுக்கு பார்க்கும் திறனிருந்தால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்குமாம்.

No comments: