Friday, October 17, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1163 -1166

குறள்-1163

காதல் சில நேரங்களில் அவளுக்கு மன வருத்ததைத் தருகிறது.காமநோயால் வருந்துவதை அவரிடம் சொல்லவும் வெட்கம் தடுக்கிறது.ஒருபக்கம் துன்பம்..ஒரு பக்கம் நாணம்.அதை அவள் எப்படி தாங்குகிறாள்?

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. #1163

காதல் துன்பத்தையும் அவரிடம் சொல்ல முடியாமல், காதல் நோயால் ஏற்பட்ட வெட்கத்தையும் சொல்ல முடியாமல் உயிரே காவடித் தண்டாகவும்..அதன் ஒரு புறம் காமநோயும், மறு புறம் வெட்கமுமாய் இருப் பக்கங்களிலும் தொங்குகின்றன.

குறள்-1164

காதலினால் ஏற்பட்ட துன்பம்..வெட்கம் இரண்டிலும் அவளிடம் அதிகம் காணப்படுவது காதல் துன்பமே.அதைக் கடக்கும் வழிதான் தெரியவில்லையாம் அவளுக்கு

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

காமமாகிய கடல் உள்ளது.ஆனால் அதை நீந்திக் கடந்து செல்ல காவலான தோணியோ இல்லை

குறள்-1165

அவன் இன்பத்தையும் அளிக்கிறான்..அதே நேரம் பிரிந்து விடும் துயரத்தையும் அளிக்கிறான்.அவரிடம் தேவையின்றி பகமை ஏர்படின் அவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான்.அந்த நினைப்பே அவளுக்கு பயமாய் உள்ளது.

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

இன்பம் தரும் நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். துன்பம் தரும் பகையை வெல்லும் வலிமை வேண்டும்போது என்ன செய்வாரோ

குறள்-1166

காதலிப்பது..காதல்..இதெல்லாம் கடல் அளவு பெரியது.அதிலும்..ஆனால் காதல் நோயால் வருந்துவது என்பது அந்தக் கடலைவிடப் பெரியதாம்

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.


காமம் மகிழ்விக்கையில் அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

No comments: