Sunday, June 2, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 34

பிறப்பு என்று இருக்கும்போது இறப்பு என்று ஒன்றும் கட்டாயம் ஆகிறது.

வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது? என்கிறார் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில்.

ஆனாலும்..நம் சொந்தம் ஒருவரோ...முக்கிய நட்போ இறந்துவிட்டால்.."இது எல்லாம் இயற்கை" என்று நம்மால் எண்ணமுடியவில்லை.சோகத்தில் வாடுகிறோம்.அத்துன்பத்திலிருந்து மீள நமக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது.

ஆனால்.. ஒருவரின் மறைவு நமக்கு ஏற்படுத்தும் துன்பத்தைவிட பெரிய துன்பம் ஒன்றும் உள்ளதாம்.

அது என்ன தெரியுமா?

வறியவர்க்கு நம்மால் எதுவும் வழங்க இயலாத நிலையில் நமக்கு உண்டாகும் துன்பமாம் அது,

சாதலின் இன்னாத தில்லை இனித்தூஉம்
ஈத லியையாக் கடை (230)

சாவு என்பது தரும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.

No comments: