நடை தளர்ந்து போகிறது.உச்சி வெளுத்து விட்டது..தனியாக நடக்க சிரமப்படுகிறோம்.
அப்போது உறுதுணையாகிறது ஊன்றுகோல்.
அதுபோல நம் வாழ்வில் துணையாக அமைவது வேறொன்றும் உண்டாம்.
அது என்ன என வள்ளுவர் சொல்வதைப் பார்ப்போம்..
நாம் கல்வியறிவு அற்றவராய் இருந்தாலும்..கற்றவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டுமாம்.அது நடை தளர்ந்தவனுக்கு உதவும் ஊன்றுகோல் போல உதவுமாம்.
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை (414)
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
அடுத்த குறளிலும் ஊன்றுகோலை வல்லுவர் விடவில்லை.சொல்கிறார்..
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல் (415)
என்கிறார்.
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல, ஒழுக்கமுடையவர்களின் அறிவுரையானது உதவும் .
அப்போது உறுதுணையாகிறது ஊன்றுகோல்.
அதுபோல நம் வாழ்வில் துணையாக அமைவது வேறொன்றும் உண்டாம்.
அது என்ன என வள்ளுவர் சொல்வதைப் பார்ப்போம்..
நாம் கல்வியறிவு அற்றவராய் இருந்தாலும்..கற்றவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டுமாம்.அது நடை தளர்ந்தவனுக்கு உதவும் ஊன்றுகோல் போல உதவுமாம்.
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை (414)
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
அடுத்த குறளிலும் ஊன்றுகோலை வல்லுவர் விடவில்லை.சொல்கிறார்..
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல் (415)
என்கிறார்.
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல, ஒழுக்கமுடையவர்களின் அறிவுரையானது உதவும் .
No comments:
Post a Comment