Friday, June 7, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 39

உலகம் என்பது ஒன்று..ஆனால்..அது பொருள் உள்ளவரையே மதிக்குமாம்.ஆனால்..அதே நேரம் அருளில்லார்க்கு என்று உலகம் ஒன்று இருக்கிறதா..

ஆம்..எதன் மீதும் பற்று இல்லா துறவு வாழ்வு வாழ்பவர்களுக்கான உலகம் அது..

இவ்வுலகில் , சாதாரண வாழ்வு வாழ்பவர்களுக்கு பொருள் முக்கியமாய் அமைந்துள்ளதாம்.

"பொருள் படைத்தவன் கருத்தானால், அதை சபை மீறுமா?" என்பார் கவியரசு கண்ணதாசன்.அதாவது, பணம் படைத்தவன் எதைப் பேசினாலும், அது தவறென்றாலும்..சொல்ல பயந்து ஒரு கூட்டம் "ஆமாம்" சாமி ஆகிவிடுவார்களாம்

பொருள் இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்...

அரு ளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)

பொருள் இல்லாதவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இராது.அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் வாழ்க்கையும், அவர்கள் சார்ந்த உலகத்தில் (இங்கு பற்றற்ற துறவற வாழ்வு எனலாம்) சிறப்பாக மையாது

No comments: