Tuesday, June 18, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 50

கோபத்தில்..பிறர் மீது சாபமிடும் போது சிலர் நிலத்தினை கையால் வலு உள்ளவரைத் தட்டி சத்தியம் செய்வதை நாம் கேட்டு இருக்கிறோம்...பார்த்து இருக்கிறோம்.

அப்படி சத்தியம் செய்வதன் மூலம் பலன் இருக்கிறதோ இல்லையோ!  நம் கைதான் வலிக்கும்.

அதுபோலத்தான், அந்த சினத்தினைப் பண்பாகக் கொண்டவன் நிலையும்...

கையும் வலிக்கும்..அவனது சினமும் அவனை அழிக்கும்

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (307)

நிலத்தைக் கையால் அறந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும்.அதுபோலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.


No comments: