பிச்சை எடுத்து வாழ்வது என்பது ஒரு ஈனத்தொழிலாகக் கருதப்படுவது.
ஆனாலும்...அத்தொழிலைச் செய்தாவது படிக்க வேண்டும். ."பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்றனர்.இதற்கு ஒவ்வொருவரும் எப்படியேனும் கல்வி அறிவைப் பெற வேண்டும் என்று அர்த்தம் கொள்ளலாம்.
எது எப்படியாயினும் இரந்து வாழ்வது கொடுமையானது.ஆனால், அதைக்காட்டிலும் கொடுமை ஒன்று உள்ளதாம்.அது என்ன தெரியுமா?
பிறருக்குக் கொடுப்பதால், தன்னிடம் உள்ளது அழிந்துவிடும் என எண்ணி தானே அனுபவிப்பதுதானாம்.
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (229)
பிறருக்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
ஆனாலும்...அத்தொழிலைச் செய்தாவது படிக்க வேண்டும். ."பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்றனர்.இதற்கு ஒவ்வொருவரும் எப்படியேனும் கல்வி அறிவைப் பெற வேண்டும் என்று அர்த்தம் கொள்ளலாம்.
எது எப்படியாயினும் இரந்து வாழ்வது கொடுமையானது.ஆனால், அதைக்காட்டிலும் கொடுமை ஒன்று உள்ளதாம்.அது என்ன தெரியுமா?
பிறருக்குக் கொடுப்பதால், தன்னிடம் உள்ளது அழிந்துவிடும் என எண்ணி தானே அனுபவிப்பதுதானாம்.
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (229)
பிறருக்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
No comments:
Post a Comment