Monday, June 17, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 49

இருள்...

அந்த இருளைப் போக்க சிறு விளக்கினை ஏற்றி வைத்தால்..வெளிச்சம் இருட்டினை துரத்திவிடுகிறது.

அதுபோல உண்மை பேசுபவனை உயர்ந்தவன் எனக் காட்டும் பொய்யாமை ஒளி மிக்க விளக்காம் .

நான் உண்மை  என அறிந்தவரையில் உண்மையை பேசுவதைத்  தவிர வேறு எந்த பண்பும் உயர்வானதில்லை என்று சொன்ன வள்ளுவர்..மேலே சொல்லியுள்ளபடி பொய்யாமை விளக்கினைப் பற்றியும் சொல்லியுள்ளார்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (299)

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தொன் எனக் காட்டும் ஒளி மிக்க விளக்காகும்  

No comments: