Tuesday, June 4, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 37

மானிடப் பிறவி ஏற்படுவதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்.

பிறவி எடுத்தப் பின் எந்த விதக் குறிக்கோளும் இல்லாமல், கோடிக்கணக்கான மனிதருள் ஒருவனாக வாழ்த்து மடிவதில் என்ன பலன்?

இந்தப் பிறவி முடிந்தாலும்..நாம் விட்டுச் சென்ற செயல்கள் நம் புகழைப் பாடிக் கொண்டிருக்க வேண்டும்.அதுவே பிறவி எடுத்ததன் பயனாகும்.இல்லையேல்...எந்த வித விளைச்சலுக்கும் உதவாத நிலத்தை சுமந்துக் கொண்டிருக்கும் பூமி நம்மையும் அத்துடன் சேர்ந்து ஒன்றாக சுமப்பது போல பயனற்றவராவோமாம்.

இதையே வள்ளுவர் சொல்கிறார்...

வகையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம் (239)

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

No comments: