Friday, June 21, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 55

எண்ணும், எழுத்தும் ஒருவருக்கு இரு கண்கள் எனலாம்.

ஒருவருக்கு கண் இல்லாவிடினும், அவர் கற்றவராய் இருந்தால், கண்ணுடையவராகவே எண்ணப்படுவார்.

ஆனால், அதே நேரம் கல்லாதாருக்கு, கண்கள் இருந்தாலும்..அவை கண்களாகக் கருதப்படாது  முகத்தின் இரு புண்களாகவேக் கருதப்படுமாம்.

கல்லாதார் கண்களை புண்ணுக்கு ஒப்பிடுகிறார் பொய்யாமொழியார்.

கண்ணுடைய ரென்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (393)


கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

No comments: