Saturday, June 22, 2019

வள்ளுவன்..ஒப்பீடுகளும்- 58

இயற்கை பெண்ணின் உடலை அற்புதமாகப் படைத்திருக்கிறது.

அவள் மூலம் உலகிற்கு வரும் குழந்தைகள் பால் அருந்த வேண்டும் என்பதற்காகவே இறைவன் மார்பகங்களை அவளுக்குப் படைத்திருக்கின்றான்.அவை கை எடுத்து கும்பிடும்படி இருக்க வேண்டியவை ஆனால் கவர்ச்சிப் பொருளாக நினைக்கும் நிலை இன்று.

பெண்ணின் மார்பகங்கள் தாய்மையின் பெருமையை உணர்த்துபவை,

இப்போது விஷயத்திற்கு வருவோம்..

படிக்காத முட்டாள் ஒருவனின் பேச்சை கேட்க விரும்புவது என்பது எதனைப் போல் இருக்கிறது என வள்ளுவன் சொல்கிறார் தெரியுமா?

மார்பகம் இல்லா பெண் மீது மையல் கொள்வது போலாம்.

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று  (402)

கல்லாதவனின் சொல் கேட்க விரும்புவது, மார்பகம் இல்லா பெண் மீது மையல் கொள்வத்ற்கு ஒப்பானதாகும்.(தாய்மை உணர்வு அற்ற பெண் என்று கொள்ளலாம்) 

No comments: