Sunday, June 30, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 67

தேவையான சாதனங்களுடன்,காலம் அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால், அந்தச் செயலின் முழு வெற்றியை நாம் சுவைக்கமுடியும்..

இதை வள்ளுவர் எதனுடன் ஒப்பிட்டு சொல்கிறார் பார்க்கலாம்.

கோட்டான் ஒன்று இருக்கிறது.அது இரவில் தொல்லைக் கொடுத்து கொண்டிருக்கிறது.ஏனெனில் அதற்கு இரவில் பார்வையின் கூர்மை அதிகம்.அதை வெல்லமுடியுமா?

கண்டிப்பாக...அதை ஒரு காக்கையினால் கூட முடியுமாம்? என்ன ஒன்று...பகல் நேரத்தில்தான் அது முடியுமாம்.ஏனெனில்..அப்போது கோட்டானுக்கு பார்வை மந்தம்.

அதுபோல, ஒரு எதிரியை வீழ்த்த வேண்டுமானால், அதற்குரிய  சரியான காலத்திற்குக் காத்திருந்துத் தாக்கினால் போதும்.வெற்றி நமதே!

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481)

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும்.(அதுபோல) எதிரியை வீழ்த்துவதற்கு  ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

No comments: