Monday, July 1, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் -68

கொடுமையான நிகழ்ச்சிகளைக் காணும் போது, நியாயத்திற்காக பொங்கி எழுவது மனிதநேயம் மிக்க மனிதனின் குணமாகும்.

ஆனால்..சில மன உறுதியானவர்கள், கொடுமையைக் கண்டும் , பார்த்தும் வாளாயிருப்பர்.அது அச்சத்தால் அல்ல.
அவர்கள் அடுத்து பகைவனைத் தாக்க தயார் நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்களாம்..

இது எதைப்போல என்றால்...

ஊர்த்திருவிழாக்களில், ஆட்டுக்கடா இரண்டை சண்டைக்கு விடுவார்கள்.

அவை ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள தன் கால்களை சற்றே பின்னுக்கு தள்ளிக் கொண்டு பாய தயாராய் ஆக்கிக் கொள்ளும்.அதுபோலவாம்.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து  (486)

கொடுமையானவர்களைக் கண்டும் கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல. அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.  

No comments: