Thursday, July 18, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 86

வாழ்வில் இன்ப, துன்பங்கள் வருவதைத் தடுக்க முடியாது.

ஆனால், துன்பம் சூழ்கையில் துவண்டு போகாமல், அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற வள்ளுவர்..

துன்பத்தை விரட்ட விடாமுயற்சித் தேவை என்கிறார்.

அந்த முயற்சியை எதனுடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்..

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து (624)

தடங்கள் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டிடும்

No comments: