Thursday, July 18, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 88

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு, அவற்றை வகைப்படுத்தியும், சுவையாகவும் சொல்லும் சொல்லாற்றல் படைத்தவர்களை எதிர்த்து வெல்வது மிகவும் கடினமாகும்

அப்படி இல்லாதவர்களை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார் தெரியுமா?

மலர் என்றாலே மணம் உள்ளதாக இருக்க வேண்டும்.மணம் இல்லா சில மலர்களும் உண்டு.இவை கொத்து கொத்தாக பூத்திருந்தாலும் கொள்வாரில்லை.அம்மலர்களுடன் சொல்லாற்றல் இல்லாதவர்களை ஒப்பிடுகிறார்

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார் (650)

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்கள்.

No comments: