Saturday, July 27, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 125

ஆதாயத்திற்காக, நம்மை ஏமாற்றி அன்புமொழியினைப் பேசும் விலைமகளிர் உறவை ஒரு போதும் நம்பி ஏமாறக்கூடாது.

விலைமாதர்கள் பணத்திற்காக மட்டுமே ஒருவரைத் தழுவி அன்பு காட்டுவது எது போலவாம்..

இருட்டறையில் ஒரு பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாம்

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று (913)

விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவி பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்

No comments: