Saturday, July 27, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 124

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால், நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடுமாம்.

அதை எப்படி சொல்கிறார் தெரியுமா?

ஒருவரைச் சுற்றி நெருப்பு.வெளியே வரவிடாமல் அவரை சுடுகிறது.அவர் தப்பு முடியும் என்ற அறிகுறியே இல்லை.ஆனால்..அப்படிப்பட்டவர்கள் கூட தப்பிப் பிழைத்துக் கொள்ள முடியுமாம்.ஆனால்..ஆற்றல் மிக்க பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பவே முடியாதாம்.

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார் (896)

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்.ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது 

No comments: