Wednesday, July 3, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 70

பகைவரை எதிர்க்கும் வலிமை இருந்தாலும், தாக்குதல் நடத்தும் இடம் தேர்ந்தெடுத்து, நம்மையும் காத்துக் கொண்டு பகைவருடன் மோதினால் வெற்றி நிச்சயமாகும்.

உதாரணமாக...முதலைக்கு தண்ணீரில் இருக்கும் வரையில் தான் பயம்.அதைவிட்டு வெளியே வந்துவிட்டால் அது பலமிழந்துவிடும்.அதனை சாதாரண உயிரும் வென்றுவிடுமாம்.அதுபோல இடமறிந்து பகைவரைத் தாக்கினால் அவனை எளிதில் வெற்றி கொள்ளலாம்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற  (495)

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்கு பலம்.தண்ணீரைவிட்டு வெளியே வந்துவிட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்

No comments: