Monday, July 29, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகலும் -137

எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவதே பண்புடைமை எனும் சிறந்த ஒழுக்கத்தைப் பெற எளிதான வழியாக அமையும்.

நன்மைகளைச் செய்து பிறருக்கு பயன்பட பணியாற்றுபவர்களின் நற்பண்பை உலகமே பாராட்டும்.

அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும் , மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்திற்கு ஒப்பானவர் ஆவார்

இதையே..

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர் (997)

என்கிறார்.


No comments: