Wednesday, July 24, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 110

ஒருவரிடம் எந்தவிதப் பலனையும் எதிர்பாராது ,அன்பு ஒன்றையே மையமாக வைத்து உருவாவது சிறந்த  நட்பாகும்.

தனக்குப் பயன் கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டுப் பயனில்லாத போது பிரிந்து விடுபவர்கள் நட்பு இருந்தாலும், இழந்தாலும் ஒன்றுதான்

பயனை எதிர்ப்பார்த்து ஏற்படும் நட்பு எப்படிப்பட்டதாம் தெரியுமா?

ஒரு விலைமகள் போன்றதாம். அத்துடன் மட்டுமல்லாது அப்படிப்பட்ட நட்பு கொள்பவர்கள் கள்வர்கள் போலாம்

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் (813)

பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும்,விலைமகளிரும்,கள்வரும் ஆகிய இம்மூவரும் ஒரே மாதிரியானவர்கள் ஆவார்கள்

No comments: