Wednesday, July 24, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 107

ஒருவருடன் நட்பு கொள்வது என்பது அரிய செயல் அல்ல.
அதற்கு இருவருக்குமிடையே ஏற்கனவே தொடர்பும், பழக்கமும் இருக்க வேண்டும் என்பதில்லை.ஒத்த மனஉணர்வே போதுமானது.

ஆனால், அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பை எதனுடன் ஒப்பிடுகிறார் தெரியுமா..அது பிறைநிலவாகத் தோன்றி முழு நிலவாக வளருமாம்.

அதே சமயம், அறிவில்லாதவர்களுடன் ஆன நட்பு முழுநிலவாய் முளைத்துப் பின்னர் தேய்பிறையாய்க் குறைந்து மறையுமாம்.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு (782)

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாய்த் தோன்றி முழுநிலவாக வளரும்.அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்

No comments: