Friday, July 5, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 73

தன்னிடம் உள்ளதை முடிந்த அளவிற்கு பிறர்க்கும் அளித்து வாழ்வானாகின், அவனை சுற்றம் வாழ்த்தும்

காகம்...

இது தனக்குக் கிடைத்ததை மறைக்காமல், தனது சுற்றத்தையும் கூவி அழைத்து உண்ணும்.அதுபோல பிறருக்கும் அளித்து வாழ்ந்தால் அவன் போற்றப்படுவான்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள  (527)

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும்.அதுபோன்ற குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு 

No comments: