அறிவுடையோர் நிறைந்த அவையில், தன் கருத்துகளை மனதில் பதியும்படி சொல்லத் தெரியாதவன், எவ்வளவு நூல்களைப் படித்தவனாயிருந்தாலும் அதனால் என்ன பயனும் இல்லை என்று சொல்லும் வள்ளுவர், அவர்களை கல்லாதவர்களைவிட இழிவானவர்கள் என்கிறார்.
கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார் (729)
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகக் கருதப்படுவார்கள்
அடுத்த குறளில், இதைவிட சற்று அதிகமாகவே சொல்கிறார்.அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும் இறந்தவருக்குச் சமமானவர் என்கிறார்.
உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார் (730)
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும் கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்
கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார் (729)
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகக் கருதப்படுவார்கள்
அடுத்த குறளில், இதைவிட சற்று அதிகமாகவே சொல்கிறார்.அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும் இறந்தவருக்குச் சமமானவர் என்கிறார்.
உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார் (730)
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும் கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்
No comments:
Post a Comment