Monday, July 29, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 136

ஒருவருக்கு ஏற்படும் தோல்வியைக் கூட ஓப்புக் கொள்ளும் மனப்பாங்கே அவரின் மேன்மைக்கு உரைகல் ஆகும்.

தமக்கு தீங்கு செய்பவருக்கும் நன்மையே செய்ய வேண்டும்.அதுவே சான்றாண்மை எனும் நல்ல பண்பாகும்.

ஊழிக்காலம் ஏற்பட்டாலும், எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறினாலும், அவை தம்நிலை மாறாது.அதுபோல சான்றோர் நிலைமாறாதக் கடலாகத் திகழ்வார்களாம்.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார் (989)

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும் கூடத் தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்

No comments: