Sunday, July 21, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 98

அறிஞர்கள் கூடியுள்ள சபையில், அதிக உலக ஞானம் அறியாதவன்..தன் திறமையைக் காட்டுவதாக எண்ணி பயனற்ற சொற்களை சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.

அதேபோன்று நல்லோர் நிறைந்த அவையில் மனதில் பதியும்படி கருத்துகளைசொல்லும் வல்லமைப் பெற்றவர்கள், அறிவற்றோர் உள்ள அவையில் பேசாமலிருப்பதே நலனாகும்

உணர்ந்து கொள்வோர் முன்னிலையில் பேசுவது எதற்கு ஒப்பாகும் தெரியுமா? வள்ளுவர் வாக்கினைப் பார்ப்போம்

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று (718)

உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் அளிக்கும்

No comments: