Friday, July 19, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 93

நம்மைவிட மேலானோர் நட்பு நமக்குக் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.

நாம் அவர்களுடன் எப்படிப் பழக வேண்டும்..

இதற்கும் வள்ளுவர் சொல்கிறார்.அவர் திருக்குறளில் சொல்லாமல் விட்டதுஎன்ன இருக்கிறது!

ஒரு அரசனுடன் பழகுபவர் அவருடன் எப்படி பழக வேண்டும் என்று சொல்கிறார்.

குளிர் வாட்டுகிறது.நெருப்பினை மூட்டி குளிர் காய்கிறோம்.அப்போது என்ன செய்வொம்? நெருப்பை விட்டு நீங்கவும் மாட்டோம்..நெருப்பிடம் நெருங்கவும் மாட்டோம்.அதுபோல பழக வேண்டுமாம்

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் (691)

முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வது போல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.

No comments: